onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
இன்னும் சில நாட்களில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளைக்காரன் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்படுவது போன்றோ அல்லது ஒரு பயங்கரவாதி தன் தேவைக்காக பல நிலவுடைமையாளர்களை கொலை செய்வது போலவும் அவனை காவல்துறை அடக்க தந்திரமாக ஒழிப்பது போன்றோ திரைப்படம் வரலாம். இந்திய திராவிட முதலாளித்துவ அடிமைகளும், கங்காணிகளும் இப்படி ஒரு செயலை செய்யலாம். ஆனால் வரலாறு என்றும் அழிந்திடாது. வரலாற்றில் இருந்து அவனை அழித்திடவும் முடியாது. தமிழர் உள்ளவரை, தமிழ் தேசியம் என்ற கோட்பாடு உள்ளவரை ஏன் தமிழ் தேசியம் என்ற சொல் உள்ளவரை அவரின் புகழை அவரின் வரலாற்றை அழிக்க முடியாது. இந்திய திராவிட ஏகாதிபத்திய கூட்டுசதியால் அவரின் உடல் அழிக்கப்பட்டாலும் புகழ் அழியாது. செப்டம்பர் 1. தமிழ்த் தேசியப் போராளி, பொதுவுடைமை போராளி, தமிழ்நாடு விடுதலை படை தலைவர், தமிழ்நாடு பொதுவுடைமை கட்சி தலைவர், இந்திய தேசிய இனங்களின் விடுதலையை நேசித்த பெரும் தலைவர், ஏகாதிபத்தியத்தை இறுதிவரை எதிர்த்த மாவீரன் தமிழரசன் கொலை செய்யப்பட்ட நாள்.
இந்திய திராவிட கூட்டு சதியால் கொல்லும் அளவிற்கு தமிழரசன் என்ன செய்தார்?
இன்று இந்தியா நாடு அல்ல ஒன்றியம் என்று நீட்டி முழங்குவோர்க்கு முன்பே "இந்தியம் ஒரு தேசியம் அல்ல.. தேசிய இனங்களின் சிறைக்கூடம்" என்று முழங்கியவர் தமிழரசன். ரஷ்யா இன்று கம்யூனிஸ்ட் நாடு அல்ல. முதலாளிதுவ வழியில் செல்லும் வல்லாதிக்க நாடு. ரஷ்யாவால் எந்த நாட்டுக்கும் நன்மை கிடைக்காது என்பதை ஆதாரத்துடன் தத்துவ ரீதியாக எடுத்துரைத்தார். இந்தியம், திராவிடம் ஈழ போராட்டத்திற்கு என்றும் உதவி செய்யாது. இவர்களின் நோக்கம் இலங்கையில் முதலீடு செய்வதே என்பதை 1984 லேயே பெண்ணாடம் அறிக்கையில் போட்டுடைத்தவர். ஈழ தமிழர் மட்டுமல்ல, சிங்களவர்களும் விடுதலை பெற வேண்டும் அவர்களின் ஆட்சியாளர்களிடம் இருந்து என்று சொன்னவர். தமிழ்நாடு மட்டுமின்றி அசாம், நாகா, மணிப்பூர், மிசோரம், பஞ்சாப், காஷ்மீர், தெலுங்கானா போன்ற விடுதலை தாகம் கொண்ட அனைத்து இனங்களின் விடுதலையை வலியுறுத்தி பேசியவர்.. இந்தியத்தில் சாதியின் தோற்றம், வளர்ச்சி, நடைமுறை சிக்கல் குறித்து தெளிவான பார்வையை முன்வைத்து அதற்கான தீர்வையும் சொல்லியவர். தேசிய இன போராட்டத்தில் சாதிய ஒழிப்பின் முக்கியத்துவம் உணர்த்தியவர். மீன்சுருட்டியில் 1985இல் இவர் பேசிய சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் என்ற பேச்சு இன்றும் சாதியவாதிகளை கலக்கமடைய செய்யும். தமிழரசன் இருந்தவரை வட தமிழகத்தில் சாதிய பிரச்சனை தலை தூக்கவும் இல்லையே. அப்படிப்பட்ட தமிழரசன் மரணித்த நாள் செப்டம்பர் 1.
இந்த நாள்,கருணாநிதி மட்டுமல்ல எம்.ஜி.ஆர் முகத்திரையை கிழித்தது. போலி கம்யூனிஸ்ட்கள் பல இயக்கங்களின் முகத்திரையை கிழித்தது. இந்திய முதலாளிதுவ கங்காணி அரசின் முகத்திரையை கிழித்தது.
தமிழ் தேசியத்தை தலைவர் தமிழரசன் இன்றியோ புலவர் கலியபெருமாள் இன்றியோ பேச இயலாது. அப்படி பேசுவோர் வல்லாதிகத்திற்கு பயந்தோ அல்லது வல்லாதிக்க கூட்டுறவு கருத்தியோ வேண்டுமானால் தவிர்க்கலாம்..
இந்திய திராவிட கூட்டு சதியால் கொல்லும் அளவிற்கு தமிழரசன் என்ன செய்தார்?
இன்று இந்தியா நாடு அல்ல ஒன்றியம் என்று நீட்டி முழங்குவோர்க்கு முன்பே "இந்தியம் ஒரு தேசியம் அல்ல.. தேசிய இனங்களின் சிறைக்கூடம்" என்று முழங்கியவர் தமிழரசன். ரஷ்யா இன்று கம்யூனிஸ்ட் நாடு அல்ல. முதலாளிதுவ வழியில் செல்லும் வல்லாதிக்க நாடு. ரஷ்யாவால் எந்த நாட்டுக்கும் நன்மை கிடைக்காது என்பதை ஆதாரத்துடன் தத்துவ ரீதியாக எடுத்துரைத்தார். இந்தியம், திராவிடம் ஈழ போராட்டத்திற்கு என்றும் உதவி செய்யாது. இவர்களின் நோக்கம் இலங்கையில் முதலீடு செய்வதே என்பதை 1984 லேயே பெண்ணாடம் அறிக்கையில் போட்டுடைத்தவர். ஈழ தமிழர் மட்டுமல்ல, சிங்களவர்களும் விடுதலை பெற வேண்டும் அவர்களின் ஆட்சியாளர்களிடம் இருந்து என்று சொன்னவர். தமிழ்நாடு மட்டுமின்றி அசாம், நாகா, மணிப்பூர், மிசோரம், பஞ்சாப், காஷ்மீர், தெலுங்கானா போன்ற விடுதலை தாகம் கொண்ட அனைத்து இனங்களின் விடுதலையை வலியுறுத்தி பேசியவர்.. இந்தியத்தில் சாதியின் தோற்றம், வளர்ச்சி, நடைமுறை சிக்கல் குறித்து தெளிவான பார்வையை முன்வைத்து அதற்கான தீர்வையும் சொல்லியவர். தேசிய இன போராட்டத்தில் சாதிய ஒழிப்பின் முக்கியத்துவம் உணர்த்தியவர். மீன்சுருட்டியில் 1985இல் இவர் பேசிய சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் என்ற பேச்சு இன்றும் சாதியவாதிகளை கலக்கமடைய செய்யும். தமிழரசன் இருந்தவரை வட தமிழகத்தில் சாதிய பிரச்சனை தலை தூக்கவும் இல்லையே. அப்படிப்பட்ட தமிழரசன் மரணித்த நாள் செப்டம்பர் 1.
இந்த நாள்,கருணாநிதி மட்டுமல்ல எம்.ஜி.ஆர் முகத்திரையை கிழித்தது. போலி கம்யூனிஸ்ட்கள் பல இயக்கங்களின் முகத்திரையை கிழித்தது. இந்திய முதலாளிதுவ கங்காணி அரசின் முகத்திரையை கிழித்தது.
தமிழ் தேசியத்தை தலைவர் தமிழரசன் இன்றியோ புலவர் கலியபெருமாள் இன்றியோ பேச இயலாது. அப்படி பேசுவோர் வல்லாதிகத்திற்கு பயந்தோ அல்லது வல்லாதிக்க கூட்டுறவு கருத்தியோ வேண்டுமானால் தவிர்க்கலாம்..