T
The Reader
Guest
- Thread starter
- #1
View attachment
நிறைய விமர்சனங்களும் முரண்களும் கலைஞரிடம் இருப்பதுபோலவே, மக்கள் நலத்திட்டங்களிலும் தமிழக வளர்ச்சியிலும் அவருக்கு மிகப்பெரிய பங்கும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, காலம் கோரும்போதெல்லாம் பெரியார் கொள்கைகளை திட்டங்களாக அமல்படுத்த அவர் தயங்கியதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழக அரசியல் வரலாற்றை எழுதும்போது கலைஞரை புறக்கணித்துவிட்டு எழுதிவிட முடியாது.
இதை ஏன் இப்போது சொல்லத் தோன்றுகிறது என்றால், இன்று அவரது பிறந்தநாளில் திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது, மேற்சொன்ன காரணங்களால் பல்வேறு இயக்கங்கள், துறைகளைச் சார்ந்தவர்களும் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டாலும்...
இன்னொருபுறம், அவர் மீது வெறுப்பையும் அவதூறுகளையும் அள்ளி வீசும் போக்கையும் சமூக ஊடகங்களில் காணமுடிகிறது. சங்கிகள் இதைத்தான் செய்வார்கள். அதிமுக அடிமைகளையும் கணக்கில் வைக்க வேண்டியதில்லை. ஆனால், 'கண்மூடித்தனமான' தமிழ்தேசியவாதிகளின் கலைஞர் வெறுப்பரசியல் சகிக்கமுடியாததாக இருக்கிறது. அதிலும், சீமான் அடிப்பொடிகள் 'கலைஞர் வெறுப்பு ஹேஷ்டாக்' போட்டு, வெறிகொண்டு தாக்கும் அளவுக்கு முன்னேறி சங்கிகளை மிஞ்சிவிட்டார்கள்!
இது மிகவும் ஆபத்தான போக்கு. அவர்களுக்கு சொல்லிக்கொள்ள ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. கலைஞரையோ திமுகவையோ அரசியலாக விமர்சிப்பதற்கு முழு உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால், இன்றைய ஆர்எஸ்எஸ் மதவெறி பாசிச சூழலில், திராவிட அல்லது திமுக வெறுப்பரசியல் சங்கிகளுக்கு புறவாசல் திறக்கும் கேடுகெட்ட செயல் என்பதுதான் அது.
நிறைய விமர்சனங்களும் முரண்களும் கலைஞரிடம் இருப்பதுபோலவே, மக்கள் நலத்திட்டங்களிலும் தமிழக வளர்ச்சியிலும் அவருக்கு மிகப்பெரிய பங்கும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, காலம் கோரும்போதெல்லாம் பெரியார் கொள்கைகளை திட்டங்களாக அமல்படுத்த அவர் தயங்கியதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழக அரசியல் வரலாற்றை எழுதும்போது கலைஞரை புறக்கணித்துவிட்டு எழுதிவிட முடியாது.
இதை ஏன் இப்போது சொல்லத் தோன்றுகிறது என்றால், இன்று அவரது பிறந்தநாளில் திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது, மேற்சொன்ன காரணங்களால் பல்வேறு இயக்கங்கள், துறைகளைச் சார்ந்தவர்களும் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டாலும்...
இன்னொருபுறம், அவர் மீது வெறுப்பையும் அவதூறுகளையும் அள்ளி வீசும் போக்கையும் சமூக ஊடகங்களில் காணமுடிகிறது. சங்கிகள் இதைத்தான் செய்வார்கள். அதிமுக அடிமைகளையும் கணக்கில் வைக்க வேண்டியதில்லை. ஆனால், 'கண்மூடித்தனமான' தமிழ்தேசியவாதிகளின் கலைஞர் வெறுப்பரசியல் சகிக்கமுடியாததாக இருக்கிறது. அதிலும், சீமான் அடிப்பொடிகள் 'கலைஞர் வெறுப்பு ஹேஷ்டாக்' போட்டு, வெறிகொண்டு தாக்கும் அளவுக்கு முன்னேறி சங்கிகளை மிஞ்சிவிட்டார்கள்!
இது மிகவும் ஆபத்தான போக்கு. அவர்களுக்கு சொல்லிக்கொள்ள ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. கலைஞரையோ திமுகவையோ அரசியலாக விமர்சிப்பதற்கு முழு உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால், இன்றைய ஆர்எஸ்எஸ் மதவெறி பாசிச சூழலில், திராவிட அல்லது திமுக வெறுப்பரசியல் சங்கிகளுக்கு புறவாசல் திறக்கும் கேடுகெட்ட செயல் என்பதுதான் அது.