onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
View attachment
உலகில் உள்ள எல்லா நதிகளும் பனிமலைகளிலோ அல்லது பனிப்பாறைகளிலோ தோன்றும்.. ஏன் இந்தியாவிலேயே கங்கை சிந்து பிரம்மபுத்திரா போன்ற நதிகள் பனிமலையில் தோன்றும் நதிகளே.. இந்த பனிமலைகள் எல்லாம் நீரை பனிக்கட்டியாக மாற்றி வைத்திருக்கும்.. அவை மெல்ல மெல்ல உருகி நதியாக மாறும்..
ஆனால் தென்னிந்தியாவின் தாய் மேற்கு தொடர்ச்சி மலை இதற்கு விதிவிலக்கு.. மேற்கு தொடர்ச்சி மலை பனிமலை அல்லாமலே பனிமலையின் பணியை செய்கிறது..
குஜராத்தின் அருகே தபதி நதியிலிருந்து கன்னியாகுமாரி வரை சுமார் 1600 கி.மீ நீளம் கொண்டது இந்த மலை.. காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி போன்ற தென்னிந்தியாவின் அனைத்து நதிகளின் பிறப்பிடம் இந்த மலையே.. ஆனால் இந்த நதிகள் எவ்வாறு பிறக்கிறது என்பது ஆச்சர்யமான ஒன்று..
மேற்கு தொடர்ச்சி மலை தன்னுள்ளே பல அடுக்கு காடுகளை கொண்டுள்ளது.. முதல் அடுக்கு காடு வெப்பமண்டல காடு.. இவை தான் நாம் சுற்றுலாவில் காணும் காடுகள். இரண்டாம் அடுக்கு அடர் காடு.. இந்த காடுகளில் மனிதர் நுழைவது கடினம்... அடர்த்தியும் ஆபத்தும் அதிகம்.. மூன்றாம் அடுக்கு சோலைக்காடுகள்.. இவை அதிக உயரத்தில் இருப்பவை.. மரங்கள் குள்ளமாக இருக்கும்.. அடர்த்தி குறைவாக இருக்கும்.. ஆனால் மிகப் பழமையானவை.. நான்காம் அடுக்கு சோலைப்புல்கள்.. இங்கே எந்த மரமும் இருக்காது.. போர்வைபோல் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை புல் போர்த்தியிருக்கும்..
இதில் சிறப்பு வாய்ந்தது சோலைப்புல்லும் சோலைக்காடுகளுமே.. மழை பெய்யும் வேலையில் இந்த சோலைப்புற்கள் நீரை உறிஞ்சி கொள்கின்றன.. பஞ்சு போல் அனைத்து நீரையும் உறிஞ்சி கொண்டு சேகரித்து வைத்து கொள்கின்றன.. தேவைக்கு மேல் உள்ள நீரை மண்ணுக்குள் அனுப்புகிறது.. மீத நீரை வேரில் சேகரிக்கிறது.. ஏற்கெனவே நீர் நிறைந்த அந்த சோலைப்புல்லும் சோலைக்காடும் அந்த நீரை உட்கிரக்காமல் வெளியேற்றும்.. கோடிக்கணக்கான புல்களில் இருந்து துளித்துளியாய் வெளியேறும் நீரே நமக்கு சிற்றோடையாக வருகிறது.. பல சிற்றோடைகளே ஆறாக மாறுகிறது..
இப்படி பனிமலையின் வேலையை புற்களை கொண்டும் மரங்களை கொண்டுமே செய்யும் அதிசய மலையான மேற்கு தொடர்ச்சி மலை ஆக்கிரமிப்பாலும் கனிமவள கொள்ளையாலும் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.. அதன் தாக்கமே ஆறுகளின் அழிவு.. தென்பெண்ணை பாலாறு போன்ற ஆறுகளின் அழிவிற்கு முக்கிய காரணம் கர்நாடகாவின் நந்தி மலை மற்றும் கோலார் சுரங்க ஆக்கிரமிப்பே.. வைகை நதியின் அழிவு தேனி பகுதியில் வருசநாடு மக்களின் ஆக்கிரமிப்பே..
அதிசய மலை மெல்ல மேல்ல கொலை செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது..
உலகில் உள்ள எல்லா நதிகளும் பனிமலைகளிலோ அல்லது பனிப்பாறைகளிலோ தோன்றும்.. ஏன் இந்தியாவிலேயே கங்கை சிந்து பிரம்மபுத்திரா போன்ற நதிகள் பனிமலையில் தோன்றும் நதிகளே.. இந்த பனிமலைகள் எல்லாம் நீரை பனிக்கட்டியாக மாற்றி வைத்திருக்கும்.. அவை மெல்ல மெல்ல உருகி நதியாக மாறும்..
ஆனால் தென்னிந்தியாவின் தாய் மேற்கு தொடர்ச்சி மலை இதற்கு விதிவிலக்கு.. மேற்கு தொடர்ச்சி மலை பனிமலை அல்லாமலே பனிமலையின் பணியை செய்கிறது..
குஜராத்தின் அருகே தபதி நதியிலிருந்து கன்னியாகுமாரி வரை சுமார் 1600 கி.மீ நீளம் கொண்டது இந்த மலை.. காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி போன்ற தென்னிந்தியாவின் அனைத்து நதிகளின் பிறப்பிடம் இந்த மலையே.. ஆனால் இந்த நதிகள் எவ்வாறு பிறக்கிறது என்பது ஆச்சர்யமான ஒன்று..
மேற்கு தொடர்ச்சி மலை தன்னுள்ளே பல அடுக்கு காடுகளை கொண்டுள்ளது.. முதல் அடுக்கு காடு வெப்பமண்டல காடு.. இவை தான் நாம் சுற்றுலாவில் காணும் காடுகள். இரண்டாம் அடுக்கு அடர் காடு.. இந்த காடுகளில் மனிதர் நுழைவது கடினம்... அடர்த்தியும் ஆபத்தும் அதிகம்.. மூன்றாம் அடுக்கு சோலைக்காடுகள்.. இவை அதிக உயரத்தில் இருப்பவை.. மரங்கள் குள்ளமாக இருக்கும்.. அடர்த்தி குறைவாக இருக்கும்.. ஆனால் மிகப் பழமையானவை.. நான்காம் அடுக்கு சோலைப்புல்கள்.. இங்கே எந்த மரமும் இருக்காது.. போர்வைபோல் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை புல் போர்த்தியிருக்கும்..
இதில் சிறப்பு வாய்ந்தது சோலைப்புல்லும் சோலைக்காடுகளுமே.. மழை பெய்யும் வேலையில் இந்த சோலைப்புற்கள் நீரை உறிஞ்சி கொள்கின்றன.. பஞ்சு போல் அனைத்து நீரையும் உறிஞ்சி கொண்டு சேகரித்து வைத்து கொள்கின்றன.. தேவைக்கு மேல் உள்ள நீரை மண்ணுக்குள் அனுப்புகிறது.. மீத நீரை வேரில் சேகரிக்கிறது.. ஏற்கெனவே நீர் நிறைந்த அந்த சோலைப்புல்லும் சோலைக்காடும் அந்த நீரை உட்கிரக்காமல் வெளியேற்றும்.. கோடிக்கணக்கான புல்களில் இருந்து துளித்துளியாய் வெளியேறும் நீரே நமக்கு சிற்றோடையாக வருகிறது.. பல சிற்றோடைகளே ஆறாக மாறுகிறது..
இப்படி பனிமலையின் வேலையை புற்களை கொண்டும் மரங்களை கொண்டுமே செய்யும் அதிசய மலையான மேற்கு தொடர்ச்சி மலை ஆக்கிரமிப்பாலும் கனிமவள கொள்ளையாலும் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.. அதன் தாக்கமே ஆறுகளின் அழிவு.. தென்பெண்ணை பாலாறு போன்ற ஆறுகளின் அழிவிற்கு முக்கிய காரணம் கர்நாடகாவின் நந்தி மலை மற்றும் கோலார் சுரங்க ஆக்கிரமிப்பே.. வைகை நதியின் அழிவு தேனி பகுதியில் வருசநாடு மக்களின் ஆக்கிரமிப்பே..
அதிசய மலை மெல்ல மேல்ல கொலை செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது..