onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
நக்சல்லைட் என்ற பெயரைக் கேட்டாலே ஏதோ தீவிரவாதிகள் போலவும், வெறுமனே குண்டு வைப்பவர்கள் போலவும், மக்களுக்கு எதிரானவர்கள் போலவும் ஒரு தோற்றம் மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ளது.. இந்திய ஒன்றியத்தின் விடிவெள்ளி நக்சல்பாரி இயக்கம். இவ்வியக்கம் சாதித்தது ஏராளம்.. மேற்குவங்காளம், தெலுங்கானா, தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் வலுவாக இருந்த நக்சல்பாரி இயக்கம். தமிழகத்தில் அப்பு தொடங்கி, புலவர் கலியபெருமாள், தமிழரசன், தியாகு, திருவள்ளுவன், மாறன், சுந்தரம்,லெனின் என பலர் நக்சல்பாரி இயக்கத்தின் உறுப்பினர்களே. நக்சல்பாரி தோழர்கள் பற்றி நேர்மறை எழுத்துக்களை வடக்கில் அருந்ததிராய் அவர்கள் முன்னெடுத்தார்.. ஆனால் தெற்கு?
தோழர் வள்ளுவன் அவர்களின் மகள் ஊர்மிளா வள்ளுவன் அவர்கள் தொகுத்த இந்த நூல் 80 பக்க அணுகுண்டு.. தன் தந்தையின் வாழ்க்கையை குறிப்பிடும் இந்த நூலில் அவர் நக்சல்பாரி தோழர்கள் குறித்தும், அவர்கள் அனுபவித்த துன்பம் குறித்தும், யாருக்காக உயிரைக் கொடுத்தார்களோ அந்த மக்களால் உதாசினப் படுத்தப்பட்டாலும் அதைப் பற்றி சிறிதும் வருத்தம் இன்றி மக்களுக்கு அவர்கள் உழைத்த தன்னலமற்ற உழைப்பைபற்றியும், அவர்கள் சிறையில் அனுபவித்த கொடுமைகள் குறித்தும் ஓரளவு இந்த நூல் குறிப்பிடுகிறது.. இந்த ஆரம்பம் இனிதே தொடர்ந்து பல நூல்கள் ஆகட்டும் ❤
தோழர் வள்ளுவன் அவர்களின் மகள் ஊர்மிளா வள்ளுவன் அவர்கள் தொகுத்த இந்த நூல் 80 பக்க அணுகுண்டு.. தன் தந்தையின் வாழ்க்கையை குறிப்பிடும் இந்த நூலில் அவர் நக்சல்பாரி தோழர்கள் குறித்தும், அவர்கள் அனுபவித்த துன்பம் குறித்தும், யாருக்காக உயிரைக் கொடுத்தார்களோ அந்த மக்களால் உதாசினப் படுத்தப்பட்டாலும் அதைப் பற்றி சிறிதும் வருத்தம் இன்றி மக்களுக்கு அவர்கள் உழைத்த தன்னலமற்ற உழைப்பைபற்றியும், அவர்கள் சிறையில் அனுபவித்த கொடுமைகள் குறித்தும் ஓரளவு இந்த நூல் குறிப்பிடுகிறது.. இந்த ஆரம்பம் இனிதே தொடர்ந்து பல நூல்கள் ஆகட்டும் ❤