Reputation:
Reputation:
Reputation:
Reputation:
Reputation:
Romba detailed aana pathivu. Aathitha karikaalanai soolchi seithi kondravargalaana ravithasan, parameshwaran aagiyoruku enna maathiri dandanai vazhangapattathu endru udaiyaalur kalvettil thelivaga ezhuthapattirunthum athai maraikkum nokkaththodu ezhuthappattathey ponniyin Selvan.மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சுருக்கம் நேற்று வெளியிடப்பட்டது. கதாபாத்திரங்களைப் பார்த்தேன்.
கல்கியின் பொன்னி செல்வனை அப்படியே எடுப்பாரா? இல்லையேல் வேறு எதும் இணைப்பாரா என தெரியவில்லை.
ஏனெனில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையே, உண்மை வரலாறை திரித்து எழுதப்பட்டது தான்.
ஆதித்த கரிகாலனை பார்ப்பன சூழ்ச்சியால் கொலை செய்து,
சுந்தர சோழனை சிறைப்படுத்தி,
சிறைச்சாலையிலேயே கொன்று,
கணவன் இழந்த துயரத்தில்
ராசராச சோழனையும், குந்தவையையும் பால்ய பருவத்தில் விட்டுவிட்டு, தாய் வானவன் மாதேவி உடன்கட்டை ஏறி,
இதனால் பார்ப்பனர்கள் மீது ஆத்திரம் கொண்ட குந்தவை வைணவ மதத்திலிருந்து நீங்கி...
அதை தொடர்ந்து நடக்கும் வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டதே கல்கியின் பொன்னியின் செல்வன்.
கி.பி.1006 க்குப் பிறகு குந்தவை என்ன ஆனார் என்று கல்கியும் சொல்லவில்லை. வரலாறும் பதிவு செய்யப்படவில்லை.
சோழ வம்சத்தில் மூன்று குந்தவைகள் உண்டு.
கீழைச் சாளுக்கிய அரசகுலப் பெண்ணான வீமன் குந்தவையைச் சுந்தரசோழனின் தந்தையான அரிஞ்சயச்சோழன் திருமணம் செய்து கொண்டிருந்தான். இவரே முதல் குந்தவை.
அரிஞ்சயச்சோழன், வீமன் குந்தவையைத் திருமணம் செய்ததைப் போன்று, வைதும்ம அரசகுலத்தைச் சேர்ந்த கல்யாணி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்திருந்தான். அரிஞ்சயச்சோழனுக்கும், கல்யாணிக்கும் பிறந்தவனான சுந்தரச்சோழன், தனது பெரிய தாயாரான வீமன் குந்தவையின் நினைவாகத் தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டான். இவர் இரண்டாவது குந்தவை.
இரண்டாவதாக அறியப்படும் சுந்தரச்சோழனின் மகளான குந்தவைக்கு, மந்தாகினி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவரே வல்லவராயன் வந்தியத்தேவனைத் திருமணம் செய்தவர்.
குந்தவை நாச்சியாரின் மீது அளவுகடந்த மரியாதையும், அன்பையும் கொண்டிருந்த, குந்தவை நாச்சியாரின் தம்பியும் சோழப் பேரரசனுமான இராஜராஜசோழன், தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இவரே சோழ வரலாற்றில் மூன்றாம் குந்தவையாக குறிப்பிடப்படுகிறார்.
இராஜராஜ சோழனின் தமக்கையான குந்தவை நாச்சியார் திருமணம் செய்த வந்தியத்தேவனும், மகள் குந்தவை திருமணம் செய்த விமலாதித்தனும், கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவர்கள்.
திருமாலுக்கு மற்றொரு பெயர் முகுந்தன். முகுந்தன் என்றால் வீடுபேறு அடைந்தவர் என்று பொருள். வடமொழிச் சொல்லான முகுந்தன் என்ற பெயரையே பெண்பாலுக்கு குந்தவை என்று வைத்திருக்கிறார்கள். குந்தவை என்றால் லட்சுமி என்று தெலுங்கில் பொருள் கொள்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் படத்தில் கதாபாத்திரமாகும் குந்தவை ராசராசசோழனின் தமக்கை.
தஞ்சை அருகே உள்ள வல்லத்தை தலைநகராக கொண்டு நடைபெற்ற முத்தரையர்களின் ஆட்சியை வீழ்த்தியே சோழ வம்ச அரசுகள் உருவானதும்- அதன் பிறகு தஞ்சையை தலைநகராக ஆக்கியதும்.
விஜயாலய சோழவம்சம்
1.விஜயாலயச் சோழன்
(ஆட்சிகாலம்-கி.பி.848-871)
த/பெ சுராதிராசன்
தலைநகரம்-தஞ்சாவூர்
2.ஆதித்த சோழன்
(871-907)
த/பெ விஜயாலய சோழன்
தஞ்சாவூர்
3.முதலாம் பராந்தகச் சோழன்
(907-950)
த/பெ ஆதித்த சோழன்
தஞ்சாவூர்
4.கண்டராதித்த சோழன்
(950-955)
த/பெ முதலாம் பராந்தகச் சோழனின் இரண்டாம் மகன்
தஞ்சாவூர்
5.அரிஞ்சயச் சோழன்
(956-957)
த/பெ முதலாம் பராந்தகச் சோழனின் மூன்றாவது மகன்
தஞ்சாவூர்
6.இரண்டாம் பராந்தகச் சோழன்
(957-973)
த/பெ அரிஞ்சயச் சோழன்
தஞ்சாவூர்
7.ஆதித்த கரிகாலன்
(957-969)
த/பெ சுந்தர சோழன்
காஞ்சிபுரம்
8.உத்தம சோழன்
(970-985)
த/பெ கண்டராதித்த சோழன்
தஞ்சாவூர்
9.முதலாம் ராசராச சோழன்
(985-1014)
த/பெ சுந்தர சோழன்
தஞ்சாவூர்
10.முதலாம் ராசேந்திர சோழன்
(1012-1044)
த/பெ. முதலாம் ராசராச சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
11.முதலாம் ராசாதிராச சோழன்
(1018-1054)
த/பெ முதலாம் ராசேந்திர சோழனின் மூத்த மகன்
கங்கை கொண்ட சோழபுரம்
12.இரண்டாம் ராசேந்திர சோழன்
(1051-1063)
த/பெ முதலாம் ராசேந்திர சோழனின்
இரண்டாவது மகன்
கங்கை கொண்ட சோழபுரம்
13.வீர ராசேந்திர சோழன்
(1063-1070)
த/பெ இரண்டாம் ராசேந்திர சோழனின் மகன்
கங்கை கொண்ட சோழபுரம்
14.அதி ராசேந்திர சோழன்
(1070)
த/பெ வீர ராசேந்திர சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
சாளுக்கிய சோழ வம்சம்
15.முதலாம் குலோத்துங்க சோழன்
(1070-1120)
த/பெ முதலாம் ராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரன்
கங்கை கொண்ட சோழபுரம்
16.விக்கிரம சோழன்
(1118-1136)
த/பெ முதலாம் குலோத்துங்கச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
17.இரண்டாம் குலோத்துங்க சோழன்
(1133-1150)
த/பெ விக்கிரம சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
18.இரண்டாம் ராசராச சோழன்
(1146-1163)
த/பெ இரண்டாம் குலோத்துங்கச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
19.இரண்டாம் ராசாதிராச சோழன்
(1163-1178)
த/பெ இரண்டாம் ராசராச சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன்
கங்கை கொண்ட சோழபுரம்
20.மூன்றாம் குலோத்துங்க சோழன்
(1173-1218)
த/பெ இரண்டாம் ராசராச சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
21.மூன்றாம் ராசராச சோழன்
(1216-1256)
த/பெ மூன்றாம் குலோத்துங்கச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
22.மூன்றாம் ராசேந்திர சோழன்
(1246-1279)
த/பெ மூன்றாம் ராசராச சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
சோழ வம்சத்தில் இத்தனை கதாபாத்திரங்கள் உண்டு. இந்த ஒவ்வொன்றிற்கும் பின்னால், பெரும் வரலாறும் உண்டு.
சோழர்கள் ஆட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் யாதெனில், 11 ம் நூற்றாண்டில் தொடங்கிய சாதிச்சண்டைகள் தான். இடங்கை 96 சாதிகள், வலங்கை 96 சாதிகள் எனப் பிரிந்து மோதிக் கொண்டதே. இருபிரிவுக்கும் இம்மோதலைத் தூண்டிவிட்டு நடத்தியது, இச்சாதிகளில் அடங்காத பார்ப்பனர்கள் என்பதே வரலாறு.
07-09-22
Reputation:
Wow... very much informative..மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சுருக்கம் நேற்று வெளியிடப்பட்டது. கதாபாத்திரங்களைப் பார்த்தேன்.
கல்கியின் பொன்னி செல்வனை அப்படியே எடுப்பாரா? இல்லையேல் வேறு எதும் இணைப்பாரா என தெரியவில்லை.
ஏனெனில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையே, உண்மை வரலாறை திரித்து எழுதப்பட்டது தான்.
ஆதித்த கரிகாலனை பார்ப்பன சூழ்ச்சியால் கொலை செய்து,
சுந்தர சோழனை சிறைப்படுத்தி,
சிறைச்சாலையிலேயே கொன்று,
கணவன் இழந்த துயரத்தில்
ராசராச சோழனையும், குந்தவையையும் பால்ய பருவத்தில் விட்டுவிட்டு, தாய் வானவன் மாதேவி உடன்கட்டை ஏறி,
இதனால் பார்ப்பனர்கள் மீது ஆத்திரம் கொண்ட குந்தவை வைணவ மதத்திலிருந்து நீங்கி...
அதை தொடர்ந்து நடக்கும் வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டதே கல்கியின் பொன்னியின் செல்வன்.
கி.பி.1006 க்குப் பிறகு குந்தவை என்ன ஆனார் என்று கல்கியும் சொல்லவில்லை. வரலாறும் பதிவு செய்யப்படவில்லை.
சோழ வம்சத்தில் மூன்று குந்தவைகள் உண்டு.
கீழைச் சாளுக்கிய அரசகுலப் பெண்ணான வீமன் குந்தவையைச் சுந்தரசோழனின் தந்தையான அரிஞ்சயச்சோழன் திருமணம் செய்து கொண்டிருந்தான். இவரே முதல் குந்தவை.
அரிஞ்சயச்சோழன், வீமன் குந்தவையைத் திருமணம் செய்ததைப் போன்று, வைதும்ம அரசகுலத்தைச் சேர்ந்த கல்யாணி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்திருந்தான். அரிஞ்சயச்சோழனுக்கும், கல்யாணிக்கும் பிறந்தவனான சுந்தரச்சோழன், தனது பெரிய தாயாரான வீமன் குந்தவையின் நினைவாகத் தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டான். இவர் இரண்டாவது குந்தவை.
இரண்டாவதாக அறியப்படும் சுந்தரச்சோழனின் மகளான குந்தவைக்கு, மந்தாகினி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவரே வல்லவராயன் வந்தியத்தேவனைத் திருமணம் செய்தவர்.
குந்தவை நாச்சியாரின் மீது அளவுகடந்த மரியாதையும், அன்பையும் கொண்டிருந்த, குந்தவை நாச்சியாரின் தம்பியும் சோழப் பேரரசனுமான இராஜராஜசோழன், தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இவரே சோழ வரலாற்றில் மூன்றாம் குந்தவையாக குறிப்பிடப்படுகிறார்.
இராஜராஜ சோழனின் தமக்கையான குந்தவை நாச்சியார் திருமணம் செய்த வந்தியத்தேவனும், மகள் குந்தவை திருமணம் செய்த விமலாதித்தனும், கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவர்கள்.
திருமாலுக்கு மற்றொரு பெயர் முகுந்தன். முகுந்தன் என்றால் வீடுபேறு அடைந்தவர் என்று பொருள். வடமொழிச் சொல்லான முகுந்தன் என்ற பெயரையே பெண்பாலுக்கு குந்தவை என்று வைத்திருக்கிறார்கள். குந்தவை என்றால் லட்சுமி என்று தெலுங்கில் பொருள் கொள்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் படத்தில் கதாபாத்திரமாகும் குந்தவை ராசராசசோழனின் தமக்கை.
தஞ்சை அருகே உள்ள வல்லத்தை தலைநகராக கொண்டு நடைபெற்ற முத்தரையர்களின் ஆட்சியை வீழ்த்தியே சோழ வம்ச அரசுகள் உருவானதும்- அதன் பிறகு தஞ்சையை தலைநகராக ஆக்கியதும்.
விஜயாலய சோழவம்சம்
1.விஜயாலயச் சோழன்
(ஆட்சிகாலம்-கி.பி.848-871)
த/பெ சுராதிராசன்
தலைநகரம்-தஞ்சாவூர்
2.ஆதித்த சோழன்
(871-907)
த/பெ விஜயாலய சோழன்
தஞ்சாவூர்
3.முதலாம் பராந்தகச் சோழன்
(907-950)
த/பெ ஆதித்த சோழன்
தஞ்சாவூர்
4.கண்டராதித்த சோழன்
(950-955)
த/பெ முதலாம் பராந்தகச் சோழனின் இரண்டாம் மகன்
தஞ்சாவூர்
5.அரிஞ்சயச் சோழன்
(956-957)
த/பெ முதலாம் பராந்தகச் சோழனின் மூன்றாவது மகன்
தஞ்சாவூர்
6.இரண்டாம் பராந்தகச் சோழன்
(957-973)
த/பெ அரிஞ்சயச் சோழன்
தஞ்சாவூர்
7.ஆதித்த கரிகாலன்
(957-969)
த/பெ சுந்தர சோழன்
காஞ்சிபுரம்
8.உத்தம சோழன்
(970-985)
த/பெ கண்டராதித்த சோழன்
தஞ்சாவூர்
9.முதலாம் ராசராச சோழன்
(985-1014)
த/பெ சுந்தர சோழன்
தஞ்சாவூர்
10.முதலாம் ராசேந்திர சோழன்
(1012-1044)
த/பெ. முதலாம் ராசராச சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
11.முதலாம் ராசாதிராச சோழன்
(1018-1054)
த/பெ முதலாம் ராசேந்திர சோழனின் மூத்த மகன்
கங்கை கொண்ட சோழபுரம்
12.இரண்டாம் ராசேந்திர சோழன்
(1051-1063)
த/பெ முதலாம் ராசேந்திர சோழனின்
இரண்டாவது மகன்
கங்கை கொண்ட சோழபுரம்
13.வீர ராசேந்திர சோழன்
(1063-1070)
த/பெ இரண்டாம் ராசேந்திர சோழனின் மகன்
கங்கை கொண்ட சோழபுரம்
14.அதி ராசேந்திர சோழன்
(1070)
த/பெ வீர ராசேந்திர சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
சாளுக்கிய சோழ வம்சம்
15.முதலாம் குலோத்துங்க சோழன்
(1070-1120)
த/பெ முதலாம் ராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரன்
கங்கை கொண்ட சோழபுரம்
16.விக்கிரம சோழன்
(1118-1136)
த/பெ முதலாம் குலோத்துங்கச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
17.இரண்டாம் குலோத்துங்க சோழன்
(1133-1150)
த/பெ விக்கிரம சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
18.இரண்டாம் ராசராச சோழன்
(1146-1163)
த/பெ இரண்டாம் குலோத்துங்கச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
19.இரண்டாம் ராசாதிராச சோழன்
(1163-1178)
த/பெ இரண்டாம் ராசராச சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன்
கங்கை கொண்ட சோழபுரம்
20.மூன்றாம் குலோத்துங்க சோழன்
(1173-1218)
த/பெ இரண்டாம் ராசராச சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
21.மூன்றாம் ராசராச சோழன்
(1216-1256)
த/பெ மூன்றாம் குலோத்துங்கச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
22.மூன்றாம் ராசேந்திர சோழன்
(1246-1279)
த/பெ மூன்றாம் ராசராச சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்
சோழ வம்சத்தில் இத்தனை கதாபாத்திரங்கள் உண்டு. இந்த ஒவ்வொன்றிற்கும் பின்னால், பெரும் வரலாறும் உண்டு.
சோழர்கள் ஆட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் யாதெனில், 11 ம் நூற்றாண்டில் தொடங்கிய சாதிச்சண்டைகள் தான். இடங்கை 96 சாதிகள், வலங்கை 96 சாதிகள் எனப் பிரிந்து மோதிக் கொண்டதே. இருபிரிவுக்கும் இம்மோதலைத் தூண்டிவிட்டு நடத்தியது, இச்சாதிகளில் அடங்காத பார்ப்பனர்கள் என்பதே வரலாறு.
07-09-22
Reputation:
Enna maari thandanai valangapattathu nu kalvettula iruku nu unaku theriyuma? Therinji iruntha.. share that with us here. Naanum therinjikuren. Apdi yen atha maraichaanga.. avlo periya aala intha parameshwaran and ravithaasan??Romba detailed aana pathivu. Aathitha karikaalanai soolchi seithi kondravargalaana ravithasan, parameshwaran aagiyoruku enna maathiri dandanai vazhangapattathu endru udaiyaalur kalvettil thelivaga ezhuthapattirunthum athai maraikkum nokkaththodu ezhuthappattathey ponniyin Selvan.
Kunthavai eppothu vainava mathathai thazhuvinaar? Chozhargal saiva pithargalaagaththaan irunthirukkiraargal. Raajarajanin irandavathu magal budhha mathathai thazhuviyathaaga kalvettu saandrugal irukkindrana. Aanal kunthavai vainavaththil irunthatharkaana saandrugal irukkindranava?
Vanthiyathevan saalukkiya vamsathai sernthavaraaga irukkalaam endru varalaatru aringargal karuthivathu unmainthan. Aanaal athey neram avar vaanar Kula veeranaagavum irukka vaaipullathaagave karthapadugirathu. Athanala than kalkiyum vaalathu arasan endru vanthiyathevanai kurippittu iruppaar.
Ethu eppadiyo, antha kathai varalaare allla.. verum karpanai enbathu thinnam. Pada surukkathai paarththathum meh endru than enaku irunthathu.. brammandam kaatchi paduththalil irukkirathey thavira kaatchigalil illai.. thamizh uchcharippum nayamaaga illai... Chozha vamsam pondrum illai!!!
Reputation:
Ithu ellathukum pinnadi oru brahmana arasiyal undu sagi.. ravidasan, parameshwaran, avanga brother ellame chera naattai serntha brahmanargal than. Paandiya aabathuthavigal nu sollitu avanga chozha desathai karuvarukka than kaathirunthargal. Aathitha karikaalan kollappattathum athukaaga than. Uthama chozhan irantha piragu, rajarajan aatchiku vanthathum, avanga and all their family were exciled.. citizen padathula Ajith soldra punishment mathiri.. thondu kizham muthal thottilla irukura kuzhanthai varai.. Kattina thuniyoda naadu kadathirukanga. Athuku muraiya visaranaiyum nadanthiruku. Athu mattum illama, entha kaanthaloor kadikaila vachu intha sathi thittam theettapattatho.. athe kaanthaloor chaalaiyai theeyitu koluthirukan raajaraaja chozhan. Ippo kooda thanjai peruvidaiyar koviloda oru vaayiluku kaanthaloor kadigai vaayilnu Peru irukkam. Antha sambavathai ninaivu vachikarathukaaga.Enna maari thandanai valangapattathu nu kalvettula iruku nu unaku theriyuma? Therinji iruntha.. share that with us here. Naanum therinjikuren. Apdi yen atha maraichaanga.. avlo periya aala intha parameshwaran and ravithaasan??
Ithu nadanthu 1000 yrs aachu.. aana ponniyin selvan kalki ipo ezhuthunathu thaana? Yen ivlo varaushathuku aparam avanga dhandanaiya maraikka PS ezhuthi irukanum??
Reputation:
Reputation:
சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் ஒரு தொல்லியல் அறிஞர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார்.Romba detailed aana pathivu. Aathitha karikaalanai soolchi seithi kondravargalaana ravithasan, parameshwaran aagiyoruku enna maathiri dandanai vazhangapattathu endru udaiyaalur kalvettil thelivaga ezhuthapattirunthum athai maraikkum nokkaththodu ezhuthappattathey ponniyin Selvan.
Kunthavai eppothu vainava mathathai thazhuvinaar? Chozhargal saiva pithargalaagaththaan irunthirukkiraargal. Raajarajanin irandavathu magal budhha mathathai thazhuviyathaaga kalvettu saandrugal irukkindrana. Aanal kunthavai vainavaththil irunthatharkaana saandrugal irukkindranava?
Vanthiyathevan saalukkiya vamsathai sernthavaraaga irukkalaam endru varalaatru aringargal karuthivathu unmainthan. Aanaal athey neram avar vaanar Kula veeranaagavum irukka vaaipullathaagave karthapadugirathu. Athanala than kalkiyum vaalathu arasan endru vanthiyathevanai kurippittu iruppaar.
Ethu eppadiyo, antha kathai varalaare allla.. verum karpanai enbathu thinnam. Pada surukkathai paarththathum meh endru than enaku irunthathu.. brammandam kaatchi paduththalil irukkirathey thavira kaatchigalil illai.. thamizh uchcharippum nayamaaga illai... Chozha vamsam pondrum illai!!!
Reputation:
நம்மவர்களின் வரலாறு போய் சேர வேண்டும் என்பது தான் ஆசையே தவிர, வரலாறு என்ற பெயரில் திரிபுகள் திணிக்கப்படுவது அல்ல. அது ஆபத்தானதும் கூட... பொன்னியின் செல்வன் கதை ஒரு புதினமாக எனக்கு மிகவும் பிடித்ததே.. ஆனால் அது வரலாறு அல்ல என்ற புரிதல் எனக்கு உண்டு. வெறும் கதை என்று மட்டும் அதை படிப்பதற்கும் வரலாறு என்று நம்புவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாளைக்கு சோழ சரித்திரத்தை தேடும் ஒருவருக்கு இந்தப்படம் ஒரு ஆவணமாக அறிமுகப்படுத்த படும்போது பெரும் சிக்கல் தோன்றலாம். முக்கியமான கதாபாத்திரங்களாக சொல்லப்படும் நந்தினி, ஆழ்வார்க்கடியான், ஈழ நாச்சியார் என்னும் ஊமை ராணி இவை எல்லாம் உண்மை என்று மக்கள் நம்பினால் எவ்வளவு பெரிய அபத்தம்?!சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் ஒரு தொல்லியல் அறிஞர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார்.
தமிழர்களாகிய நாம் இந்திய வரலாறு அனைத்தையும் அறிந்திருப்போம். பேரரசர் அசோகர் பற்றி தெரியும். இராஜபுத்திரர் வீரம் பற்றி அறிவோம். அக்பரின் ஆட்சிமுறை அறிவோம்.
ஆனால்..
நமது தமிழக வரலாறு அவர்களுக்குத் அவ்வளவாகத் தெரியது.
மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியை நாம் கொண்டாடுவோம். ஆனால் மராட்டியர்களுக்கு பல்லவனையோ சோழனையோ சேரனையோ
பாண்டியனையோ தெரியாது.
சோழர்களா.. அது யார்..?
இராஜராஜனா .. இவர் யார்.? தஞ்சாவூர் எங்கே உள்ளது.? பெரியகோவில் என்றால் என்ன.? இதுதான் வடக்கின் நிலவரம்.
இந்த ஆதங்கத்திற்கு ஒரு தீர்வாக பொன்னியின் செல்வம் திரைப்படம் வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், என்று 5 மொழிகளில் வெளியாகிறது.
நேற்று வெளியான முன்னோட்டம்
5 மொழிகளில் பல இலட்சம் வட இந்திய யார்வையாளர்களை சென்றடைந்தது.
யார் இந்த சோழர்கள்..?
இராஜராஜனின் சிறப்பு என்ன.? தேடலை துவக்கியுள்ளனர் வட பகுதி
மக்கள்.
தமிழர் வரலாற்றை இந்தியா முழுவதும் பரவலாக்கிய பொன்னியின் செல்வன் படக் குழுவினருக்கு வாழ்த்தும் வரவேற்பும்.
இதற்காகத்தானே ஆசைப்பட்டோம்.
Reputation:
இருப்பதிலேயே சிக்கலான துறை என்றால் அது வரலாற்று துறையே. பார்த்தது கேட்டது பதிப்பித்தது அறிவியல் உண்மை இவைகளின் தொகுப்பாகவே வரலாறு உள்ளது. மற்றத்துறைகளில் அறிவியல் முடிவுகளே இறுதி வடிவம் பெறுகின்றன ஆனால் வரலாறு கற்பனை தன்மையையும் அனுமதிக்கிறது யூகங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன இவற்றை தவிர்க்கவும் இயலாது. வரலாற்று துறை அறிஞர்களிடையே நிறைய முரன் உள்ளது. எது எப்படியோ உண்மை நிலை உணர அறிவியல் வரலாற்று பதிவை மட்டும் கான்பது நன்று. மற்றவை அனைத்தும் இரசிப்பதற்க்கு மட்டுமே. என்னை பொருத்தவரை மன்னராட்சி முறை மனித சமூகம் கடந்து வந்த பாதையில் மோசமான தடமாகவே பார்க்கிறேன். மன்னராட்சி முறையில் மக்கள் மகிழ்வாக இல்லை என்பதே உண்மை. எல்லா அரசனும் அயோக்கியர்களே.நம்மவர்களின் வரலாறு போய் சேர வேண்டும் என்பது தான் ஆசையே தவிர, வரலாறு என்ற பெயரில் திரிபுகள் திணிக்கப்படுவது அல்ல. அது ஆபத்தானதும் கூட... பொன்னியின் செல்வன் கதை ஒரு புதினமாக எனக்கு மிகவும் பிடித்ததே.. ஆனால் அது வரலாறு அல்ல என்ற புரிதல் எனக்கு உண்டு. வெறும் கதை என்று மட்டும் அதை படிப்பதற்கும் வரலாறு என்று நம்புவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாளைக்கு சோழ சரித்திரத்தை தேடும் ஒருவருக்கு இந்தப்படம் ஒரு ஆவணமாக அறிமுகப்படுத்த படும்போது பெரும் சிக்கல் தோன்றலாம். முக்கியமான கதாபாத்திரங்களாக சொல்லப்படும் நந்தினி, ஆழ்வார்க்கடியான், ஈழ நாச்சியார் என்னும் ஊமை ராணி இவை எல்லாம் உண்மை என்று மக்கள் நம்பினால் எவ்வளவு பெரிய அபத்தம்?!
இல்லாத பெண்ணுக்காக பைத்தியமாக அலைந்தான் ஒரு சோழ இளவரசன் என்பது அவமானம் இல்லையா?
ஆதித்த கரிகாலன் இறக்கும் தருவாயில் அருண்மொழி வர்மன் பால் குடி மறக்காத பச்சிளம் குழந்தை என்று கல்வெட்டு சான்றுகள் இருக்கையில்... இந்த கதை நடந்த காலகட்டமே தவறானது அல்லவா?
இப்படி பல திரிபுகள், உண்மை மறைப்புகள் என்று இருக்கும் ஒன்றை வரலாறு என்று சொல்வது மட்டுமே உறுத்துகிறது... மாறாக ஒரு சாதாரண கற்பனை கதை என்று கொண்டால்.. நிச்சயம் போற்றுதலுக்கு உரியதாகவே இப்படம் இருக்கும் என்று நம்புவோம்.
ஒரு திரைப்படத்தின் தாக்கம் மிக அதிகமானது. வரலாற்றில் கொள்ளையன் என்றும் வெள்ளைக்காரனின் அடிவருடியாக இருந்தவன் என்றும் பதியப்பட்ட கட்டபொம்மனை விடுதலை வீரனாக மாற்ற ஒரு திரைப்படமும் அதில் நடித்திருந்த தேர்ந்த நடிகர்களும் மட்டுமே தேவைப்பட்டனர் என்பதை நாம் மறக்கக்கூடாது. வரலாற்றை மறந்த இனம் ஒருபோதும் தழைக்காது என்பதை நாம் வரலாறே நமக்கு உணர்த்தும்.
Reputation:
Reputation:
உண்மை தான். ஆனால் அரசியல் அதிகாரம் பெற்று இருப்பவர்கள் உண்மைகளை மறைத்தும் திரித்தும் போலி வரலாறுகளை எழுதுதல் என்பது தமிழ் சமூகத்திற்கு மட்டுமே கிடைத்த சாபம் போலும். தங்கள் முன்னோர்களான வைகிங்ஸ் பல கோர கொடூரங்களை செய்திருந்தாலும் அவர்களை அம்மக்கள் எங்குமே விட்டுக்கொடுத்தது இல்லை. இன்றைய புரிதலைக் கொண்டு பண்டைய மக்களை எடை போடுதல் சிக்கலானது. Sapiens நூலில், மனிதன் தன்னுடைய சகோதர இனங்களான homo erectus, Neanderthal உட்பட ஆறு இனங்களை இனப்படுகொலை செய்திருக்கவேண்டும் என்கிறார் அந்நூலின் ஆசிரியர். ஒருவேளை மற்ற மனிதர்கள் தன்னிலிருந்து வேறுபட்டவர்கள் என்று அவன் நினைத்திருந்தால் அவர்களை வாழ விட்டிருப்பான் என்றும், தன்னுடைய விதிகளை மீறி அவன் வித்தியாசப் பட்டிருந்ததாலேயே தண்டனைகள் என்ற பெயரில் அந்த கொலைகள் நடந்தன என்றும் குறிப்பிடுகிறார். அதற்காக இப்பொழுது நம்மை நாமே நொந்துகொள்ளவோ வருதுவதோ தகாது தானே?மன்னராட்சி முறைக்கு முன்பு இருந்த குழு தலைவன் இன தலைவன்களில் இத்தகைய முறை இல்லை சிற்றரசு பேரரசு என்று விரியும் போது கொடுங்கோல் ஆட்சியே மக்கள் மீது தினிக்கப்பட்டுள்ளது. வேள்பாரி சிறு குழுவின் தலைவனாக இருந்தாலும் சகமக்களுடன் இனைந்து வாழ்ந்த விதம் மூன்று பேரரசுகளை எதிர்கொண்டவிதம் இருதியில் வேள்பாரியை அழிக்க சேர சோழ பாண்டிய பேரரசுகள் இனைந்து போர் புரிந்து வெற்றி காணவேண்டிய வரலாற்று தரவுகளை படிக்கும் போது உண்மை நாயகர்களை மறக்கடிக்க பட்டதும் வரலாற்று பிழையே.
Reputation:
உண்மை தான் இன்றைய நிலையில் இருந்து கொண்டு கடந்த காலத்தை ஆராய்வது சிக்கலானது தான்.உண்மை தான். ஆனால் அரசியல் அதிகாரம் பெற்று இருப்பவர்கள் உண்மைகளை மறைத்தும் திரித்தும் போலி வரலாறுகளை எழுதுதல் என்பது தமிழ் சமூகத்திற்கு மட்டுமே கிடைத்த சாபம் போலும். தங்கள் முன்னோர்களான வைகிங்ஸ் பல கோர கொடூரங்களை செய்திருந்தாலும் அவர்களை அம்மக்கள் எங்குமே விட்டுக்கொடுத்தது இல்லை. இன்றைய புரிதலைக் கொண்டு பண்டைய மக்களை எடை போடுதல் சிக்கலானது. Sapiens நூலில், மனிதன் தன்னுடைய சகோதர இனங்களான homo erectus, Neanderthal உட்பட ஆறு இனங்களை இனப்படுகொலை செய்திருக்கவேண்டும் என்கிறார் அந்நூலின் ஆசிரியர். ஒருவேளை மற்ற மனிதர்கள் தன்னிலிருந்து வேறுபட்டவர்கள் என்று அவன் நினைத்திருந்தால் அவர்களை வாழ விட்டிருப்பான் என்றும், தன்னுடைய விதிகளை மீறி அவன் வித்தியாசப் பட்டிருந்ததாலேயே தண்டனைகள் என்ற பெயரில் அந்த கொலைகள் நடந்தன என்றும் குறிப்பிடுகிறார். அதற்காக இப்பொழுது நம்மை நாமே நொந்துகொள்ளவோ வருதுவதோ தகாது தானே?
வரலாறை நாம் பரந்த நோக்கொடே அணுக வேண்டியிருக்கிறது. எதிரிகளும் துரோகிகளும் நமது வரலாற்றை மாற்றி எழுதி இருக்கையில், எது உண்மை என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் இருந்தும் நம் முன்னோர்கள் எவன் எவனோ வெளியில் இருந்து வந்து நம்மை அடக்கி ஆண்ட போது நிகழ்ந்த கொடுமைகளையும் அவர்கள் சுமந்து கொண்டுள்ள அவலம் இருக்கிறது.
மன்னர்கள் காலம் வேறு. வாணிபத்தில் சிறந்து, அறிவியலில் சிறந்து வாழ்ந்த ஒரு சமூகம் இன்று வெறும் அடிமை மனப்பான்மை கொண்டுள்ளதற்கு நாம் வரலாற்றை இழந்ததே காரணம். தமிழனின் உருக்கு இரும்பை பற்றி Egypt இல் கூட அத்தாட்சி கிடைக்கிறது. ஆனால் இங்கிருப்பவர்களில் எத்தனை பேருக்கு அது தெரியும்?
எல்லா மன்னனும் அயோக்கியன் அல்ல. அவன் மக்களுக்கு எது அறமோ, அதை செய்யவே அவர்கள் முயன்றிருக்கறார்கள்.
இன்றைய ஆட்சியாளர்களின் மக்களாட்சி முறையில் கூட பாலாறும் தேனாறும் ஓடவில்லை என்பது திண்ணம்.
உக்ரைன்-ல் இருந்து சில நூறு குழந்தைகளை ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார்கள் என்று கதறும் மேற்குலக நாடுகள் ஒன்று கூட ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கும் சிரியாவில் நிகழ்ந்த துயரத்திற்கும் வாய் திறக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இங்கு எல்லாவற்றிலுமே ஒரு அரசியல் பொதிந்துள்ளது.
நம்மை பற்றி நாமே தாழ்வாக நினைக்கும் நிலையில் தான் இந்த வரலாற்று புனைவுகள் எழுதப்படுகின்றன. வெள்பாரி நாவலை மட்டும் வைத்து பார்த்தால் அது தவறாகவே தெரியும். இதே மூவேந்தர்கள் சேர்ந்து தான் குப்தரையும் மொகலாயர்களையும் விரட்டினார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அரச கடமை அறம் என்பது அவர்கள் மக்களுக்கானது என்று அவர்கள் நம்பியதில் பிழையும் இல்லை. அப்படி எல்லா அரசர்களும் கொடுங்கோலர்கள் என்றால்... இன்றைய தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் தமிழ் ஆட்சி மொழியாக அதிகாரத்தில் இருந்திருக்கும்!
மக்களாட்சி என்பது நமது அடுத்த கட்ட நகர்வு. சரியானதும் கூட. ஆனால் இன்றைய நிலையில் இருந்துகொண்டு கடந்த காலத்தை ஆராய்வது சிக்கலானது!!